தமிழில் தேட.....

Thursday, May 16, 2019

பூவே உன்னை நேசித்தேன் - பருவ ராகம்



படம்: பருவ ராகம்
இசை: இளையராஜா

******************************************

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே
உள்ளத்தில் ஓசையில்லை
ஊமைக்கு பாஷையில்லை
கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா

பெண்: நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மையை வெல்ல வேண்டும்

******************************************

ஆண்: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெண்: ஓஹோ (ஆண்: ஆ) ஆஹா (ஆண்: ஆ) உண்மைதானா

ஆண்: ஏழு ஜென்மம் போனாலும்
இந்த பந்தம் போகாது

பெண்: நீயா (ஆண்: ஆ) சொன்னாய் (ஆண்: ஆ)
மெய்யே தானா

ஆண்: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பெண்: பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது
ஆ ஆ ஆ

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெண்: உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்

******************************************

பெண்: காதலுக்கு எப்போதும்
வார்த்தை மட்டும் போதாது

ஆண்: கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெண்: கண்ணடித்தால் தீராது
காதல் இங்கு வாராது

ஆண்: என்னை தந்தேன் இன்னும் என்ன

பெண்: பெண்மை என்றால்
வீரனுக்கே மாலை தந்துவிடும்
வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்
ஓ ஓஓஓ

ஆண்: பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் வேண்டும் யாசித்தேன்

பெண்: ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...