படம்: கீதாஞ்சலி
இசை: இளையராஜா
******************************************
பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே
******************************************
ஆண்: வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
பெண்: நானொரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
ஆண்: மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே
பெண்: மடிமேல் கொடி போல்
விழுந்தேனே…
ஆண்:
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலை தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்
மலரே பேசு மௌன மொழி
மலரே
******************************************
பெண்: ஏந்திய வீணை நானிருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ஆண்: ராத்திரி நேர ராகமிது
பூவோடு காற்று பாடுவது
பெண்: இதழால் இனி மேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
ஆண்: படித்தால் எனக்கும் இனிக்காதோ
பெண்: மலரே பேசு மௌன மொழி
ஆண்: மனம் தான் ஓடும் ஆசை வழி
பெண்: வாசலை தேடி ஓடி வந்தேன்
ஆண்: வாலிப ராகம் பாடி வந்தேன்
பெண்: மலரே பேசு மௌன மொழி
இருவரும் : மலரே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...