தமிழில் தேட.....

Friday, May 22, 2020

எங்கேயோ ஏதோ - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

குளிர் மேகங்கள் பனிக் காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏஏஏஏஏஏ
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

ஆண்:
பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது

பெண்:
தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா

ஆண்:
பொன்மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
ஆ ஆஆ ஆ

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலாலா லாலாலாலா
லாலாலாலா லாலாலாலா லா லா
லாலாலாலா லாலாலாலா லா லா

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே

ஆண்:
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

பெண்:
வாடாத முல்லை பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

ஆண்:
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏ ஏ ஏ ஏ

பெண்:
எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...