தமிழில் தேட.....

Sunday, May 17, 2020

பூவே இது பூஜை - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்


படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே
இது பூஜை காலமே

*********************************

சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
குயிலே ஏஏஏஏஏஏஏஏஏ
சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
வாழை மாவிலை
மஞ்சள்‌ வாசம்‌ தோன்றுமோ
பனி வாடைக்‌ காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே

பூவே
இது பூஜை காலமே

*********************************

கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
நெஞ்சே ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
கண்ணன்‌ ஞாபகம்‌ உன்னில்‌ நீங்கவில்லையே
திருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்‌
தரவேண்டி ஏங்குதே

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...