படம்: மரகத வீணை
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
*********************************
பெண் :
வீசும் காற்றே நீ மெல்ல வீசு
மலரின் வேகம் தாங்காது
ஆண் :
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது
பெண் :
இதயம் எங்கும் பன்னீரின் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது
ஆண் :
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்
பெண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
*********************************
ஆண் :
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்
பெண் :
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்
ஆண் :
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது
பெண் :
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது
ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
பெண் :
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ
இருவரும்:
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...