தமிழில் தேட.....

Sunday, May 24, 2020

மரகத வீணை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

பெண் :
வீசும் காற்றே நீ மெல்ல வீசு
மலரின் வேகம் தாங்காது

ஆண் :
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது

பெண் :
இதயம் எங்கும் பன்னீரின் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண் :
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்

பெண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

ஆண் :
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண் :
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண் :
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது

பெண் :
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

பெண் :
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

இருவரும்:
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...