படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா
*********************************
ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே
*********************************
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் :
ஆஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெண் :
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்
ஆண் :
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
பெண் :
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
ஆண் : தலையைக் குனியும் தாமரையே
*********************************
பெண் :
காத்திருந்தேன் அன்பே
இனிக்காமனின் வீதியில் தேர் வருமோ
ஆண் :
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ
பெண் :
ஆயிரம் நாணங்கள் இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா
ஆண் :
நீயொரு பொன்வீணை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
பெண் : பூவிர கந்தது முதல்முறையா
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வேதனை வேலையில் சோதனையா
பெண் : முதல் முறையா
ஆண் : இது சரியா
பெண் :
சரி சரி
பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் :
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆண் :
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
பெண் :
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே
பெண் :
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...