தமிழில் தேட.....

Monday, September 30, 2019

உன்னை கண்ட பின்பு - சிகரம் பாடல் வரிகள்



படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

*********************************

உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்

உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்


*********************************

நேற்று முதல் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு
நீர் இறைக்கிறேன்

நேற்று முதல் புத்தி மாறி
பேதலிக்கிறேன்
நானும் நிறை குடத்தை வைத்துக்கொண்டு
நீர் இறைக்கிறேன்

பூ பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன்
பூ பறிக்க போன நானும்
இலை பறிக்கிறேன் இன்று
பால் குடித்த பின்பு
தானே பல் துலக்கிறேன்

உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்


*********************************

புடவையோடு விரலை சேர்த்து
தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின்
மீது வைத்து கொள்கிறேன்

புடவையோடு விரலை சேர்த்து
தைத்து கொள்கிறேன்
சாந்து பொட்டெடுத்து மூக்கின்
மீது வைத்து கொள்கிறேன்

தனிமையோடு சத்தமாக
பேசி கொள்கிறேன்
தனிமையோடு சத்தமாக
பேசி கொள்கிறேன்
ஒரு சபை நிறைந்த வேளையிலே
மௌனம் ஆகிறேன்

உன்னை கண்ட பின்பு தான்
என்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணை கண்ட பின்பு தான்
காதல் கண்டு கொண்டேன்
காதல் கண்டு கொண்டேன்

*********************************

முத்தம்மா என்னை மூடி - சிகரம் பாடல் வரிகள்



படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

*********************************

பெண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா

ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா

*********************************

ஆண் :
தேவதைக்கும் அச்சம் உண்டு
தீர்ந்த பின்னும் மிச்சம் உண்டு
தித்திக்கும் சங்கீதம் உண்டு
பெண்கள் இல்லாத ஸ்வர்கத்தின்
பேரை மாற்றுங்களேன் ஆஹா

பெண் :
பக்தி இந்த பெண்ணில் உண்டு
முக்தி இந்த கண்ணில் உண்டு
பேர் இன்பம் வேறு எங்கே ராஜா
தேகம் இப்போது சூடாச்சு
தேனை ஊற்றுங்களேன்

ஆண் :
எங்கு சென்ற போதும் கற்கள் மண்ணோடு
என்ன சொன்ன போதும் ஆண்மை பெண்ணோடு
முத்தம் என்ற முத்தெடுக்க போராடு
முக்குளித்து மூச்சு முட்ட போராடு

பெண் :
கங்கை போகும் போக்கில்
கடலை தானே போடும்
சத்தங்கள் யார் செய்வது

ஆண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா

*********************************

பெண் :
அச்சம் பாதி நாணம் பாதி
அந்த காலம் பெண்ணின் தேதி
இப்போது ஏன் அந்த நீதி
வெட்க பட்டாலே இந்நாளில்
வெட்க கேடல்ல்லவா

ஆண் :
காதல் பாதி காமம் பாதி
அன்பு பாதி ஆசை பாதி
இல்லை என்று யார் சொல்ல கூடும்
முத்தம் யார் இங்கே தந்தாலும்
இன்பம் ஒன்றல்லவா

பெண் :
பத்தினிக்கும் ஆசை உண்டு வாழட்டும்
பத்தியங்கள் தேவை இல்லை தீரட்டும்
ஆடை என்ற பொய்மை இங்கே போகட்டும்
தேகம் என்னும் உண்மை மட்டும் வாழட்டும்

ஆண் :
மண்ணில் விண்ணை கண்டு
விண்ணில் மண்ணை கண்டு
பூலோகம் தடு மாறட்டும்

பெண் :
முத்தம்மா
என்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
வந்து கொள்ளை கொண்டு
போங்கள் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா

ஆண் :
முத்தம்மா
உன்னை மூடி வைக்க
வேண்டும் என்று சட்டம்மா
உன்னை கொள்ளை கொள்ள
வேண்டும் என்ன குற்றம்மா
இதில் ஆண் என்ன பெண் என்ன சும்மா

*********************************

இதோ இதோ என் பல்லவி - சிகரம் பாடல் வரிகள்



படம் : சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

*********************************

ஆண் :
இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ என் பல்லவி

*********************************

பெண் :
என் வானமெங்கும் பௌர்ணமி
இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால்
நான் காணும் கோலமோ

ஆண் :
என் வாழ்க்கை என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பெண் :
பசியென்பதே ருசியல்லவா
அது என்று தீருமோ

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

இதோ இதோ என் பல்லவி

*********************************

ஆண் :
அந்த வானம் தீர்ந்து போகலாம்
நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம்
நம் பாசம் மாறுமா

பெண் :
ஒரு பாடல் பாட வந்தவள்
உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா

ஆண் :
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா

இதோ இதோ என் பல்லவி
எப்போது கீதம் ஆகுமோ

பெண் :
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

ஆண் :  இதோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் :  இதோ
பெண் :  ஹ்ம்ம்
ஆண் : என் பல்லவி
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

*********************************

அகரம் இப்போ - சிகரம் பாடல் வரிகள்



படம்: சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

******************************************

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

******************************************

கார்காலம் வந்தால் என்ன
கடும் கோடை வந்தால் என்ன
மழை வெள்ளம் போகும்
கரை ரெண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

******************************************

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே

பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்

தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
கட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு


******************************************

Thursday, September 26, 2019

என்ன கதை சொல்ல சொன்னா - அண்ணா நகர் முதல் தெரு பாடல் வரிகள்



படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை:  சந்திரபோஸ்

******************************************

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

கண்ணில் கண்ட அத்தனையும்
கதையாய் போனது
இது போல் ஊரிலே
கதை எது

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம்
கவிதை பாடினோம்
பழைய கதை

பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே
உதிர்ந்தே போனது
புதிய கதை

அடடா யாவுமே முடிஞ்ச கதை
கனவா போனதே காதல் கதை

என்ன கதை சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது
அது கதையா

எவனோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா

துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா
துயரம் ஒன்று தான்
தொடர் கதையா

என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது

என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

******************************************

Wednesday, September 25, 2019

ராஜ மோகினி - காதல் ஓய்வதில்லை பாடல் வரிகள்



படம்: காதல் ஓய்வதில்லை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

மது தேன் குடங்கள்
இடை மேல் சுமந்துபோகும்
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ

******************************************

பெண்:
காதல் என்றும் ஓய்வதில்லை
கவிதை சொன்னது

ஆண்:
காதல் கண்ணில் தூக்கமில்லை
கவிஞர் சொன்னது

பெண்:
இரு கண்ணில் உன் பேரை
எழுதி பார்க்கிறேன்

ஆண்:
உறங்காமல் இருந்தாலும்
கனவு காண்கிறேன்

பெண்:
எந்த நாளும் எந்தன் ஜீவன்

ஆண்:
எந்த நாளும் எந்தன் ஜீவன்
இருவரும்: நீயே

பெண்:
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
நீ எந்தன் ஜீவனே

******************************************

ஆண்:
நாணம் கொண்டு போகும் பெண்மை
என்னை மீறி போகுமா

பெண்:
வேகமாக போகும் மேகம்
வானம் தாண்டி போகுமா

ஆண்:
மடிமீது தலை வைத்து
மயங்க போகிறேன்

பெண்:
விழியோடு இமை வைத்து
உறங்க போகிறேன்

ஆண்:
உன்னை அள்ளி கொண்ட பின்பு

பெண்:
என்னை அள்ளி தந்த பின்பு
இருவரும்: பிரிவேது

ஆண்:
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
ராஜ மோகினி
சுக ராக தேவி நீ
பெண்:
இதயம் துடிக்கும்
இசையில் சுருதி சேர்க்கும்
ராக ராஜனே
ஆண்:
சுக ராக தேவி நீ

******************************************

பூவ எடுத்து ஒரு மாலை - அம்மன் கோவில் கிழக்காலே பாடல் வரிகள்



படம்: அம்மன் கோவில் கிழக்காலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பெண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

ஆண்:
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால

பெண்:
காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வள முன்னாடி விழ
என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும்
நன்னால நெனச்சாச்சு

ஆண்:
சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள
வண்ணக்கனவு வந்ததேன்

பெண்:
கல்யாணம் கச்சேரி எப்போது
ஒனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

ஆண்:
வாடையா வீசும் காத்து
வளைக்குதே எனப்பாத்து

பெண்:
வாங்களேன் நேரம் பாத்து
வந்து எனக் காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ
அப்போதும் சூடாச்சு
எப்போதும் என கொத்தாக அணை
என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க
கொஞ்சம் அணச்சிக் கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது
ஒனக்கு
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

ஆண்:
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து
வெச்சேனே என் சின்ன ராசா

******************************************

Tuesday, September 24, 2019

காதல் மகராணி - காதல் பரிசு



படம்: காதல் பரிசு
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள்
மொட்டுப்போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்
இந்த காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்

******************************************


ஆண்:
பூவை நீ பூ மடல்
பூவுடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்

பெண்:
மான் விழி ஏங்குது
மையலும் ஏறுது
பூங்கொடியை பனிபோல் மெதுவாய் தழுவு

ஆண்:
கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடி தூங்கும் நேரம்

பெண்:
இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்

ஆண்:
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

******************************************

பெண்:
பஞ்சணை கூடத்தில்
பால் நிலா காயுதே
நான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன்

ஆண்:
உன் முக தீபத்தில்
ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்

பெண்:
மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்

ஆண்:
அன்பே அந்த தேவலோக
சொர்க்கம் இங்கே தேடுவோம்

பெண்:
காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தான்
முத்துப்போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்
இந்த காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்

ஆண்:
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்

******************************************

புன்னை வனத்து குயிலே - முத்துகாளை



படம்: முத்துகாளை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

ஆண்:
வேங்குழலின் ஓசை எழ

பெண்:
பாய் விரிக்கும் ஆசை எழ

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஓ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

******************************************

ஆண்:
மைப்பூசும் கண்ணொடும் பேசும்
நேரம் இன்று
அதை பொய் பேச வைக்கதே இங்கு
நாணம் என்று

பெண்:
அம்மாடி ஆகாதா வேகம்
நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும்
நானும் ஒன்று

ஆண்:
கண் வைத்த பின்னாலே
கை வைக்கக் கூடாதா

பெண்:
கை வைத்தால் அங்கங்கே
மின்சாரம் ஓடாதா

ஆண்:
என்னென்ன ஆனால் என்ன
ஆவல் கொண்ட போது

பெண்:
என்றாலும் எல்லைக்குள்ளே
நின்றால் தானே மாது

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

******************************************

பெண்:
என் மீது தூரல்கள் போட
மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன்
மோகம் வர

ஆண்:
முப்பலுக் கப்பாலும் போகும்
எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும்
கன்னத்திலே

பெண்:
நீ ஒன்று வைத்தாலே
நான் ஒன்று வைப்பேனே

ஆண்:
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே

பெண்:
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்

ஆண்:
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி சேர்ப்போம்

பெண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

ஆண்:
ஒ ஒ ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு

ஆண்:
வேங்குழலின் ஓசை எழ

பெ:
பாய் விரிக்கும் ஆசை எழ

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

******************************************

Sunday, September 22, 2019

கண்ணா உனைத் தேடுகிறேன் வா - உனக்காகவே வாழ்கிறேன்



படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
கண்ணா கண்ணா கண்ணா
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

******************************************

பெண்:
ஏன் இந்த காதல் என்னும்
எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும்
இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது
இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால்
தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன்
உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஆண்:
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணில் இனி சோகமில்லை
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

******************************************

ஆண்:
சோகத்தின் பாஷை என்ன
சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும்
கண்ணீர் அது காயுமா

பெண்:
சோதனை நேரலாம்
பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும்
வானம் என்ன போகுமா

ஆண்:
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

பெண்: உன்னோடுதான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
ஆண்: காதல் என்றும் தீர்வதில்லை கண்ணில் இனி சோகமில்லை

பெண்:
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

******************************************

அடடா இதுதான் சுகமோ - துடிக்கும் கரங்கள் பாடல் வரிகள்



படம்: துடிக்கும் கரங்கள்
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்

******************************************

பெண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே

ஆண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே

******************************************

பெண் : விழிகளும் விழிகளும்
தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்

ஆண் : விரல்களும் விரல்களும்
உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜூவாலைகள்

பெண் :
கன்னங்களில் தாமரை
தாது தூவும்
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்

ஆண் : கருங்கூந்தலின்
ஊஞ்சலில் பூக்கள் ஆ டும்

பெண் : அடடா
ஆண் : ஆஹா ஹ ஹா

பெண் : இதுதான்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ

பெண் : சுகமோ

ஆண் – ஹ மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ

பெண் : இனிமேல்

இருவரும் - தினமும் விழாக்கோலமே

******************************************

ஆண் :
ஒரு கொடி இடையினில் இருகுடை
பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி

பெண் :
தழுவிடும் இருவரின்
நிலவொளி சுடவரும்
நேரம் இதோ பௌர்ணமி

ஆண் :
நீலோர்பலம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம்
சாயம் தீட்டும்

பெண் : உடல் வீணையின்
தந்திகள் என்னை மீட்டும்

ஆண் : அடடா
பெண் : ஆஹா ஹ ஹா

ஆண் : இதுதான்
பெண் : ஓஹோ… ஹோ ஹோ

ஆண் : சுகமோ

பெண் : மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ

ஆண் : இனிமேல்

இருவரும் - தினமும் விழாக்கோலமே
லலாலலலா ஆ
லலாலலலா ஆ

******************************************

மாலை சூடும் வேளை - நான் மகான் அல்ல பாடல் வரிகள்



படம்: நான் மகான் அல்ல
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆஆஆ

ஆண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

******************************************

பெண்:
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ
காயும் வெயில் காலம்
பாயும் மழை நீயோ

ஆண்:
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே

பெண்: நீ கொஞ்ச நான் கெஞ்ச வேறென்ன இன்பம்
ஆண்: நீண்ட நேரம் தோன்றுமோ

ஆண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

******************************************

பெண்:
சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை
சோலை மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை

ஆண்:
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க

பெண்: அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆண்: ஆடை கொண்டு மூடுமோ

பெண்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

ஆண்:
ஏகாந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு

இருவரும்:
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை


******************************************

Wednesday, September 18, 2019

ஹலோ மை டியர் ராங் நம்பர் - மன்மத லீலை பாடல் வரிகள்



படம்: மன்மத லீலை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

******************************************

ஆண்: ஹலோ
பெண்: ஹலோ

ஆண்:
ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன

பெண்: ஹலோ

ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர்

பெண்:
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை
அதிசய பெண்மை இல்லை
ஹலோ

ஆண்: ஹலோ மை டியர் ராங் நம்பர்

பெண்: கேட்பத்தில் தீரும் உங்கள் தாகம்
ஆண்: ஹும் ஹும்
பெண்: நேரிலே பார்த்தால் என்ன லாபம்

******************************************

ஆண்:
காவிரியின் மீனோ (பெண்: நோ )
பூவிரியும் தேனோ (பெண்: நோ நோ)
காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ

பெண்:
Not yet
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்

ஆண்: Really

பெண்:
பூவை என்னைப் பார்த்தால்
காதல் வரக்கூடும்
பூஜையறை பார்க்கும் ஆசை வரக்கூடும்

ஆண்:
I don’t mind
கற்பனை ஓராயிரம் ஒரு
முறை பார்த்தால் என்ன

பெண்: ஹலோ

ஆண்:
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல்
சொர்க்கம் (பெண்: ஹும்)
நேரிலே பார்த்தால் என்ன
வெட்கம் (பெண்: ஹும் ஹும்)

******************************************

பெண்:
உன்னிடத்தில் காதல்
உள்ளவர்கள் யாரோ

ஆண்:
என்னவென்று சொல்வேன்
உன்னையன்றி யாரோ

பெண்: வேலி உள்ள முல்லை
ஆண்: வேலி எனக்கில்லை
பெண்: வேலி உள்ள முல்லை
ஆண்: வேலி எனக்கில்லை
பெண்: பொறுமையுடன் இருங்கள்
ஆண்: முதுமை வரும் வரையோ

பெண்: ஹலோ

ஆண்:
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல்
சொர்க்கம் (பெண்: ஹும்)
நேரிலே பார்த்தால் என்ன
வெட்கம் (பெண்: ஹும் ஹும்)
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தால் என்ன
பெண்: ஹலோ
ஆண்: ஹலோ

******************************************

பெண் மானே சங்கீதம் - நான் சிகப்பு மனிதன் பாடல் வரிகள்



படம்: நான் சிகப்பு மனிதன்
இசை: இளையராஜா

******************************************

பெண்:

ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஆ ஹா
ஆ ஹா ஹா ஆ ஹா ஆ ஹா ஹா

ஆண்:
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

******************************************

ஆண்:
தேன் மழை நீ ஹோய்
மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ

பெண்:
கையருகில் பூமாலை
காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்

ஆண்:
என் காதல் வானிலே
பெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்

பெண்:
உன் மானே சங்கீதம் பாடவா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம் பாடவா

******************************************

இருவரும்:
லாலால்ல லாலா லாலால்ல லாலா
லாலால்ல லாலா லாலால்ல லாலா


பெண்:
யாத்திரை ஏன் ஹோய்
ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய்
பூக்களின் தேகமே

ஆண்:
தேக மழை நான் ஆகும்
தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக
மேனியை மூடுவேன்

பெண்:
கண்ணோரம் காவியம்
கை சேரும் போதிலே
வானமும் தேடியே
வாசலில் வாராதோ

ஆண்:  பெண் மானே சங்கீதம் பாடி வா

பெண்:
அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
உல்லாசம் ஆயிரம்

ஆண்:
ம்ம்...உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா

பெண்:
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

******************************************

Tuesday, September 17, 2019

பட்டுக்கன்னம் - காக்கிச் சட்டை பாடல் வரிகள்



படம்: காக்கிச் சட்டை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்

பெண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்

******************************************

ஆண்:
நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன்
ஒரு நாள்
உந்தன் பூவிதழ் ஈரத்தில்
என்னை மறந்திருந்தேன்
பல நாள்

பெண்:
வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்
தினமும்
எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைத்திருந்தேன்
மனதில்

ஆண்:
நாணம் யாவும் நூலாடை
நானே உந்தன் புது மேலாடை

பெண்:
மங்கை இவள் அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம்
நாடகமே
ஹோ ஹோய்!

ஆண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்

பெண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்

ஆண்: ஹஹஹஹ

பெண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்

******************************************

பெண்:
கற்பனை கொஞ்சிடும் காவியச்சந்தங்களே
அடடா
இந்த காவியக் கோவிலைப் பார்த்து எழுதியதோ
தலைவா

ஆண்:
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே
கிளியே
உந்தன் பூவுடல் பார்த்தபின்
சிற்பம் வடித்தனரோ
கனியே

பெண்:
ஆசைத்தீயை தூண்டாதே
போதைப் பூவை தினம் தூவாதே

ஆண்:
அந்தியிலே வெள்ளி நிலா
அள்ளித்தரும் சுகங்களே
ஆயிரமே
ஹோ ஹோய்

பெண்:
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள
ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள
உள்ளம் துள்ளும்

ஆண்:
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா
ஹோ ஹோய்

பெண்: பட்டுக்கன்னம்
ஆண்: தொட்டுக்கொள்ள
பெண்: ஒட்டிக்கொள்ளும்

ஆண்: ஒட்டிக்கொண்டு
பெண்: கட்டிக்கொள்ள
ஆண்: உள்ளம் துள்ளும்

******************************************

தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கையா பாடல் வரிகள்



படம்: கும்பக்கரை தங்கையா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ


பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பாத்துதான்
வந்து சேரச்சொல்ல மாட்டியா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

ஆண்:
முத்து மேனிதான் பட்டு ராணிதான்
முழுதும் வாழும் யோகம்தான்
தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம்தான்

பெண்:
நீயும் நானும்
பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடணும்

ஆண்:
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழணும்

பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

ஆண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

பெண்:
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

ஆண்:
காத்து வாழும்
காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

பெண்:
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஆண்:
மாமன் முகத்தை பாத்துதான்

பெண்:
மணமாலை வந்து போடவா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

Friday, September 13, 2019

மெதுவா மெதுவா - அண்ணா நகர் முதல் தெரு பாடல் வரிகள்



படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்

******************************************

பெண்:
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று...
ஆஆ ஆஆஆஆ ஆஆ

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்:
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

பெண்:
இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று

பெண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்: இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
பெண்: ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே

ஆண்: ஹா அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
பெண்: ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு

ஆண்:
ஒரு சொந்தம் ஒரு பந்தம்
இரு ஜீவன் ஒன்றாகும்

பெண்:
இளங் கன்னி உனை எண்ணி
உயிர் காதல் பண் பாடும்

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

பெண்: மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: புதுசா புதுசா அதை காதில் கேட்டு
பெண்: புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

இருவரும்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
******************************************

சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம் பாடல் வரிகள்



படம்: அந்த ஒரு நிமிடம்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே வருகவே

சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே

******************************************

ஆண்:
அன்பு லைலா (பெண்: ஹும்)
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (பெண்: சிரிப்பு)
நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்

பெண்:
சம்மதம் என்ன சொல்லவா
மௌனமே சொல்லும் அல்லவா

ஆண்:
கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா

பெண்:
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது

ஆண்:
உன் பேரைச்சொல்கிறேன்
அதில் போதை உள்ளது

பெண்:
வருகவே வருகவே {ஆண்: ஆ...ஆ....}

ஆண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே..
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே...

******************************************


ஆண்:
மஞ்சமே தமிழின் மன்றமே
புதிய சந்தமே சிந்தினேன்..

பெண்:
அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்

ஆண்:
சொர்ணமே அரச அன்னமே
இதழின் யுத்தமே முத்தமே

பெண்:
நெற்றியில் வியர்வை சொட்டுமே
கைகள் பற்றுமே ஒற்றுமே

ஆண்:
சோழர் குயில் பாடுகையில்
சோலைக்குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்

பெண்:
சந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்ததே
தென்றலே இன்று நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்றுபோல்
என்றும் வென்று வாழ்கின்றது

ஆண்:
வாழ்கவே...வாழ்கவே..{பெ:ஆ...ஆ.}

பெண்:
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே
சிறகை விரித்து
நிலவை உரச நினைக்கிறதே

******************************************

பெண்:
அன்பு ரோமியோ
இங்கே ஒரு காவல் இல்லை
தேன் குடித்தால்
இங்கே ஒரு கேள்வி இல்லை

ஆண்:
காதலின் கல்விச் சாலையில்
கண்களே நல்ல தத்துவம்
பூவையின் மேனி அற்புதம்
பூக்களால் செய்த புத்தகம்

பெண்:
நம் காதல் பாடவே
சுரம் ஏழு போதுமா

ஆண்:
நம் நேசம் பேசவே
ஒரு பாஷை போதுமா

பெண்:
கவிமழை பொழியுமா

ஆண்:
ம்ம்..ஹும் ஹஹ்ஹஹா...
பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே
கவிதை எழுத இளைய கவிகள்

எழுகவே எழுகவே {பெண்: ஆ...ஆ...}

பழைய கனவு
உனக்கு எதற்கு கலையட்டுமே
நமது கதையை
உலகம் முழுதும் புகழட்டுமே

******************************************

Thursday, September 12, 2019

பாட வந்ததோர் கானம் - இளமைக் காலங்கள் பாடல் வரிகள்



படம்: இளமைக் காலங்கள்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
லா ல லா 
லல்ல லல்லா
ல ல லா  ஆ ஆ ஆ
ல ல லா  ஆஆ

குழு:
தார தத்த தார தத்த தார தரரா
தார தத்த தார தத்த தார தரரா
தார தத்த தார தத்த
தார தத்த தார தத்த
தா ரா ரா ரா ரா ரா

பெண்:
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்

******************************************

குழு:
லா லா
லா லா
லா லா லா லா லலல லா லா லா
லா லா லா லா லலல லா லா லா


ஆண்:
ராஜமாலை தோள்சேரும்
நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள்சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்

பெண்:
அன்பே
அன்பே
எந்நாளும் நானுந்தன் தோழி
பண்பாடி கண்மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஆண்:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லால லால லாலல் லாலா 
லால லாலல்லா லா லா

******************************************

குழு:
லா லா லா லா லலல லா லா லா
லா லா லா லா லலல லா லா லா

பெண்:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஆண்:
தேனே
தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூரும் நதிகள்
விரைந்தால் கடலும் வழிவிடும்

பெண்:
பாட வந்ததோர் கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஆண்:
கள்ளூறும்  பொன் வேளை
தள்ளாடும் பெண் மாலை
இளமை வயலில் அமுத மழை விழ

குழு:
லா லா லா லா லல லா லா
லா லா லா லா லல லா லா

பெண்:
லா லா லா லா லல லா லா
லா லா லா லா லல லா லா

******************************************

ஒரு குங்கும செங்கமலம் - ஆராதனை பாடல் வரிகள்



படம்: ஆராதனை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம் ம் ம் ம்
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்

******************************************


பெண்:
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்:
திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்

பெண்:
ஆ ஆஆஆ ஆ

ஆண்:
காயை புசிக்கும் கனியாவாய்

பெண்:
ஆ ஆஆஆ ஆ

ஆண்:
பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்
மின்னலிலே

பெண்: லா ல ல லா
ஆண்: ஒரு கயிறு எடு
பெண்: லா ல ல லா

ஆண்:
மேகங்களால் ஒரு தூளியிடு
கதிரோ தளிரோ இள மகனது திருமுகம்

பெண்:
லா ல ல லா ல ல லா
லா ல ல லா ல ல லா
ல ல லா ல ல லா லா லா

லல்லல லல்லல லல்லல லல்லா
லல்லல லல்லல லல்லல லல்லா

ஆஹா ஆஹா
லாலலா லா லா

ஆ அ ஆ ஆ
லா லா லலா


******************************************

ஆண்:
முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியை பார்த்தால் முழு வெள்ளை

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: மடியில் தவழும் மகன் பிள்ளை

பெண்: ஆ ஆ ஆ ஆ

ஆண்:
நீ ஏந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச

பெண்: (சிரிப்பு)

ஆண்:
பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாய் அதனில்

பெண்: லா ல ல லா
ஆண்: நீ சாய்ந்திருக்க
பெண்: லா ல ல லா

ஆண்:
பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி
குங்கும செங்கமலம்

பெண்: ஆ

ஆண்: இள மங்கையின் தங்க முகம்
பெண்: ஆ ஆ ஆ ஆ
ஆண்: பசி தூண்டும் அமுதம்
பெண்: ஆ ஆ ஆ
ஆண்:
தர வேண்டும் கமலம்

பெண்: (சிரிப்பு)

ஆண்:
உன் கூந்தல் பூவனம் ம் ம் ம்
ஒரு குங்கும செங்கமலம்

பெண்: ஆ ஆ

ஆண்:
இள மங்கையின் தங்க முகம்
ஒரு குங்கும செங்கமலம்

பெண்: லா ல லா லா லா

******************************************

Wednesday, September 11, 2019

என்ன சொல்லி பாடுவதோ - என் மன வானில் பாடல் வரிகள்



படம்: என் மன வானில்
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

ஆண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

******************************************

பெண்:
கோடி குயில் கூடி
எந்தன் நெஞ்சில் கூவி
மௌனம் ஏனோ என்று கேட்குதே

ஆண்:
ராகம் தொடும் நேரம் ,
வானம் தொடும் மேகம்
என்னில் உந்தன் எண்ணம் மீட்டுதே

பெண்:
நெஞ்சுக்குள் காதல் சுழல்  ஒ
மூச்சுக்குள் புல்லாங்குழல்

ஆண்:
நெஞ்சுக்குள் காதல் சுழல்  ஒ
மூச்சுக்குள் புல்லாங்குழல்

பெண்:
வெறும் கற்று இசையாக
மாறுகின்ற மாயங்களை
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

ஆண்:
என்ன சொல்லி பாடுவதோ
******************************************

ஆண்:
அந்திப் பிறை வந்து
மஞ்சள் வானில் நின்று
உன்னழகின் வண்ணம் சொல்லுதே ஒ

பெண்:
பூவின் மடி தூங்கி , தென்றல் மொழி வாங்கி
பூவை நெஞ்சின் ஓசை சொல்லுதே

ஆண்:
தீராத தேடல் ஒன்று  ஒ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு

பெண்:
தீராத தேடல் ஒன்று  ஒ
தேடட்டும் நெஞ்சம் இரண்டு

ஆண்:
சொல்லாமல் நில்லாமல் மனம்
கொள்ளும் இன்பத்துன்பம் தன்னை
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

ஆண்:
வண்ணம் தரும் தூரிகையே
எண்ணங்களை சொல்லிடதோ
என் ஓவியமே
என்ன சொல்லி பாடுவதோ

பெண்:
என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ

******************************************

பூந்தென்றலே நீ பாடி வா - மனசுக்குள் மத்தாப்பு பாடல் வரிகள்



படம்: மனசுக்குள் மத்தாப்பு
இசை: S A  ராஜ்குமார்

******************************************

ஆண்:
ம்ம்ம்
ம்ம்ம்
நன்ன நான நந நநநந நநநந

இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

ஆண்:
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்

பெண்:
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்

ஆண்:
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும்
நூறாண்டுகள்

பெண்:
நான் காதல் செய்ய
போதாது நூறாண்டுகள்

ஆண்:
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

பெண்:
கண்ணா என் மன்னா நீ
கோடி பேரில் மானுடன்

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா

பெண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்

******************************************

பெண்:
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது

ஆண்:
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பெண்:
பூலோக சொர்க்கம் கண்
முன்னே நான் காண்கிறேன்
ஆண்:
நீ தேவ வர்க்கம் உன்
நெஞ்சில் நான் வாழ்கிறேன்

பெண்:
காலங்கள் மாறினும்
தேகங்கள் போயினும்

ஆண்:
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும்
தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின் முகம்
பிருந்தாவனம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

Monday, September 9, 2019

வா வா அன்பே பூஜை - ஈரமான ரோஜாவே பாடல் வரிகள்



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா

******************************************

பெண் :
ஓ ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ

நா நா நா நா ந நா
ந ந நா நா நா
நா நா நா நா ந நா
ந ந நா நா நா


ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் :
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

ஆண் :
மாலை நேர சூரியன்
மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின்
வசந்த கீதம் கேட்கிறான்

பெண் :
அந்தி வெயில் வேளைதான்
ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான்
பனியை மெல்ல தூவும்

ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை

பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை

ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை

பெண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

ஆண் :
பறவை அழைத்தது
அதற்கொரு
துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

பெண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

பெண் :
நீலம் பூத்த பார்வைகள்
நூறு கடிதம் போட்டது
நீயும் நானும் சேர்ந்திட
நேரம் பொழுது கேட்டது

ஆண் :
மலரை வண்டு மொய்த்திட
மாதம் தேதி ஏது
மீன மேஷம் பார்ப்பதோ
காதல் தோன்றும் போது

பெண் :
காலை மாலை
ஏங்கினேன் ஏங்கினேன்

ஆண் :
கையில் நான்
உன்னை வாங்கினேன் வாங்கினேன்

பெண் :
நீயும் நீயல்ல
நானும் நானல்ல
கண்ணா

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு

பெண் :
பறவை அழைத்தது அதற்கொரு
துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது
வலம் வரத்தான்

ஆண் :
வா வா அன்பே பூஜை உண்டு
வா வா அன்பே

******************************************

Saturday, September 7, 2019

அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே பாடல் வரிகள்



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா

******************************************

குழு :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆண் :
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
இதோ காதல் ஊர்வலம்
இதோ காமன் உற்சவம்
இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன்
வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

ஆண் :
உனது பாதம்
அடடடா இலவம் பஞ்சு
நடக்கும் போது
துடித்தது எனது நெஞ்சு

இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்

தேகம் தன்னை மூடவே
கூந்தல் போதும் போதுமே
ஆடை இங்கு வேண்டுமா
நாணம் என்ன
வா வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

பெண்:
ஆ ஆஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ


ஆண் :
குழலைப் பார்த்து
முகிலென மயில்கள் ஆடும்
முகத்தைப் பார்த்து
அடிக்கடி நிலவு தேயும்

தென்னம்பாண்டி முத்தைப் போல்
தேவி புன்னகை
வண்டு ஆடச் சொல்லுமே
செண்டு மல்லிகை

உன்னைச் செய்த பிரம்மனே
உன்னைப் பார்த்து ஏங்குவான்
காதல் பிச்சை வாங்குவான்
இன்னும் என்ன சொல்ல

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
இதோ காதல் ஊர்வலம்
இதோ காமன் உற்சவம்
இங்கே

ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன்
வா

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே

******************************************

கலகலக்கும் மணியோசை - ஈரமான ரோஜாவே பாடல் வரிகள்



படம்: ஈரமான ரோஜாவே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆஹா
ஓ ஓ ஓ ஓஹோ

குழு:
லே லே லே
லே லே லே
லே லேலேலே
லே லேலேலே
லேலேலே லேலேலே

பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ

ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ

பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

******************************************

ஆண்:
திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்

பெண்:
மன்னன் இவன் மஞ்சம் தர கொஞ்சும்
அதில் கன்னம் விடு கன்னம் என கெஞ்சும்

ஆண்:
பழகிடவே வந்தாலும் பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை தா

பெண்:
அருகினிலே வந்தாலும்
அழகினையே தந்தாலும்
இனிமையிலே ஒரு மனதை தா

ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ

பெண்:
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ

ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

******************************************

குழு:
ஓ ஓஓ ஓஓஓ
ஓ ஓஓ ஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ

பெண்:
கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்கச் சுகம் பொங்கும்

ஆண்:
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்

பெண்:
படுக்கையிலே தாலாட்டு
படிக்கையிலே நீ கேட்டு
கொதிக்கையிலே அணைக்கையிலே ஓ ஓ ஓ

ஆண்:
தடுக்கிறதே உன் பேச்சு
தவிக்கிறதே என் மூச்சு
துடிக்கிறதே ரசிக்கிறதே ஹோ ஓ ஓ

பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
ஆண்:
தடைகளும் இனி ஏது ஓ ஓஓஓஓஓ

பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

பெண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓ

ஆண்:
இனி ஒரு பிரிவேது ஓ ஓஓஓ
தடைகளும் இனி ஏது ஓஓஓஓஓ

பெண்:
கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பல கனவுகள் மலரும்

ஆண்:
கொடி கொடியாம் பூங்கொடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள் தொடரும்

******************************************

Friday, September 6, 2019

இளமனது பல கனவு - செல்வி பாடல் வரிகள்



படம்: செல்வி
இசை: இளையராஜா

******************************************

ஆண்: இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

பெண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

ஆண்:இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

பெண்: அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

ஆண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

பெண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

******************************************

குழு:
லா ல ல லா
லல்ல லலா லல்ல லலா லல்ல லலா லல்ல லலா
லா ல ல லா
லல்ல லலா லல்ல லலா லல்ல லலா லல்ல லலா
லலலல லா லலலல லா
லலலல லா லலலல லா

ஆண்: கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ

பெண்: மன மொரு மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ

ஆண்: விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே
வெட்கம் - விலகட்டும் விலகட்டுமே…

பெண்: இரு கண்ணும் இரு கையும்
இள நெஞ்சமும் அன்பை
எழுதட்டும் எழுதட்டுமே

ஆண் : புதுமலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ

பெண்: புதுமலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதே

ஆண்: இளமனது
பெண்: பல கனவு
ஆண்: விழிகளிலே
பெண்: வழிகிறதே
ஆண்: சிறு வயது
பெண்: புது உறவு
ஆண்: அருகினிலே
பெண்: வருகிறதே

ஆண்: இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

பெண்: அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

ஆண்: இளமனது
பெண்: பல கனவு
ஆண்: விழிகளிலே
பெண்: வழிகிறதே
ஆண்: சிறு வயது
பெண்: புது உறவு
ஆண்: அருகினிலே
பெண்: வருகிறதே

******************************************

குழு:
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
தந்தனன தந்தனன தந்தனன தந்தனன தானா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனன தந்தனன தந்தனனா
தந்தனனா தந்தனனா தந்தனனா

பெண்: அழகிய வாசல்கள் திறந்திடுமோ
அதிலோர் ஆனந்தம் பிறந்திடுமோ

ஆண்: தலையணை வேதங்கள் விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ

பெண்: இளமைக்குள் விளைகின்ற எழில் வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே

ஆண்: தனிமைக்குள் எரிகின்ற துயர் வெள்ளமே
இங்கு வடியட்டும் வடியட்டுமே

பெண்: புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறதோ

ஆண்: புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறது

பெண் : இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே

ஆண்: சிறு வயது புது உறவு
அருகினிலே வருகிறதே

பெண்: இந்த மனதுக்கும் வயதுக்கும்
சுகம் என்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே

ஆண் : அது இரவுக்கும் பகலுக்கும்
பொது அல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே

பெண்: இளமனது
ஆண்: பல கனவு
பெண்: விழிகளிலே
ஆண்: வழிகிறதே
பெண்:சிறு வயது
ஆண்: புது உறவு
பெண்: அருகினிலே
ஆண்: வருகிறதே

******************************************

Thursday, September 5, 2019

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு - மன்னன் பாடல் வரிகள்



படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

ஆண் :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்தலக்கடி

கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்தலக்கடி

ஆண் :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் :
நான் மாமனாரு வீட்டில் மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே அண்ணனாகிப் போனேன்
கும்தலக்கடி கும்தலக்கடி
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

ஆண் :
பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது

குழு :
பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது

ஆண் :
அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே

குழு :
போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது

ஆண் : ஏத்தம் இறைப்பவன்
குழு : ஹேய்
ஆண் : ஏரைப் பிடிப்பவன்
குழு : ஹேய்
ஆண் : மூட்டை சுமப்பவன்
குழு : ஹேய்
ஆண் : முடியை வழிப்பவன்

ஆண் :
எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல

குழு : ஹேய் ஹேய்

ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே

குழு : ஹேய் ஹேய்

ஆண் :
நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா

குழு :
ஹேய்
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

ஆண் :
தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்

குழு :
புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்

ஆண் :
ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்

குழு :
நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்

ஆண் : ஏறி கெடக்குது
குழு : ஹேய்
ஆண் : எல்லாம் விலையிலே
குழு : ஹேய்
ஆண் : ஏற்றம் வரலியே
குழு : ஹேய்
ஆண் : எங்க நிலையிலே
குழு : ஹேய்
ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு : ஹேய் ஹேய்
ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி
குழு : ஹேய் ஹேய்
ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான்
குழு : ஹேய்

ஆண் :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

ஆண் :
நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்

கும்தலக்கடி கும்தலக்கடி

கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து


குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
ஆண் : ஆமாம்
குழு : இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : போடு

குழு :
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து
கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி கூட்சு வண்டியில் ஏத்து

******************************************

அம்மா என்றழைக்காத - மன்னன் பாடல் வரிகள்



படம்: மன்னன்
இசை: இளையராஜா

******************************************

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

******************************************

Wednesday, September 4, 2019

வா வா வஞ்சி - குரு சிஷ்யன் பாடல் வரிகள்



படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
வா வா வஞ்சி இளமானே

ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே

******************************************

ஆண்:
ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டு சிரிக்காதா

பெண்:
வாய் விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டுத் தெறிக்காதா

ஆண்:
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா

பெண்:
ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா

ஆண்:
பொன்வண்டு கூத்தாடும்போது
பூச்செண்டு நோகாதம்மா

பெண்:
போதும் போதும் போ

ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே

******************************************

பெண்:
நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே

ஆண்:
நான் கூட தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே

பெண்:
ஆசைகள் எனக்கும்
அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்

ஆண்:
பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

பெண்:
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா

ஆண்:
நேரம் காலம் ஏன்

பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

ஆண்:
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னை தருவேனே

பெண்:
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே

******************************************

கண்டுப் புடிச்சேன் - குரு சிஷ்யன் பாடல் வரிகள்



படம்: குரு சிஷ்யன்
இசை: இளையராஜா

******************************************

ஜங்குஜங்குஜான் ஜங்குஜங்குஜான்
ஜங்குசான் ஜான் ஜங்குஜங்குஜான்
தங்குறாதாங்குதான் தங்குறா தங்குதான்
ஹஹ ஹாஆஆஹஹ ஹ ஹ

ஹோய்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்

சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்

******************************************

மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா
வம்பு தும்பு ஏதாச்சும் பன்னாளா
உள்ளாற ஏதேதோ ஞாபகம்
உன் பாட்ட நெஞ்சோடு பாடுற
த்தனக்கட த்தனக்கட த்தனக்கட தின தின

என்னான்னு ஏதுன்னு கேட்டதும்
சொல்லாம கொள்ளாம மூடுறே
ஹொய் ஹொய் ஹொய் ஹோய்
எத்தனைப் பேர் பார்த்திருக்கேன்
எங்கிட்ட நீ மறைக்காதே
சோத்துல முழுப் பூசணிக்காய்
மறையுமுன்னு நினைக்காதே

காதில் பூவை சுத்திப்பார்க்க
நீ தான் நினைச்சா நடக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று ஓய்
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று
தர தரத்தானத்த தானத்த தா

******************************************

தினத்துன
காதல் கலையில் நான் தான் உன் முன்னோடி
குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி
கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ
அண்ணாச்சி என் வாழ்த்தை ஏத்துக்கோ

த்னத்துனஜிங்குரதான்த்தா ஜிங்குரதான்த்தா

பொண்டாட்டி ஆகாத காதலி
தாயாக ஆகாம பார்த்துக்கோ
ஹோய் ஹோய் ஹோய்

ஹோய் ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே
தூண்டியில மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே
திட்டம் போட்டு வட்டம் போடு
குருவின் பேரை கெடுக்காதே

கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் பிடிச்சேன்
காதல் நோயை கண்டுப் பிடிச்சேன்
சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா
மானே தேனே மயிலே குயிலே என்று
நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று


ஹஹ்ஹஹ
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன்
காதல் நோயை கண்டுப் புடிச்சேன் ஹோய்

******************************************