தமிழில் தேட.....

Saturday, May 30, 2020

உன்னை காணும் நேரம் - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்



படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆ
ஆ ஆஆஆ ஆஆ


ஆண் :
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னை காணும் நேரம்
நெஞ்சம்

*********************************

பெண் :
கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

ஆண் :
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

பெண் :
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

ஆண் :
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்

பெண் :
இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

ஆண் :
மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

*********************************

ஆண் :
கண்ணால் உன்னை கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

பெண் :
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

ஆண் :
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்

பெண் :
பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

ஆண் :
உன்னை காணும் நேரம் நெஞ்சம்

பெண் : ராகம் பல நூறு

ஆண் :  பாடும் தினம் தோறும்

பெண் : காலம் நேரம் ஏதும் இல்லை

ஆண் : உன்னை காணும் நேரம் நெஞ்சம்

*********************************

Thursday, May 28, 2020

தாலாட்டு மாறிப் போனதே - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்


படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

*********************************

உன் சோகம் என் ராகம்
ஏனென்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யாரென்று பார்க்கிறாய்

உன் அன்னை நான்தானே
என் பிள்ளை நீதானே
இது போதுமே

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே

*********************************

கண்ணீரில் சந்தோஷம்
நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டுப் பாடினேன்

என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண் மூடு
சுகமாய் இரு

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ

தாலாட்டு மாறிப் போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
ஆராரோ ஆரிராரிரோ
ஆராரோ ஆரிராரிரோ

*********************************

Wednesday, May 27, 2020

தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

*********************************

ஆண் :  நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பெண் :
ஆஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண் : நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்

பெண் :
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம்
பந்தி வைக்கும் நேரம்

ஆண் :
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து

பெண் :
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து

ஆண் : தலையைக் குனியும் தாமரையே

*********************************

பெண் :
காத்திருந்தேன் அன்பே
இனிக்காமனின் வீதியில் தேர் வருமோ

ஆண் :
பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ

பெண் :
ஆயிரம் நாணங்கள் இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா

ஆண் :
நீயொரு பொன்வீணை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா

பெண் : பூவிர கந்தது முதல்முறையா

ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
வேதனை வேலையில் சோதனையா

பெண் : முதல் முறையா

ஆண் : இது சரியா

பெண் :
சரி சரி
பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

ஆண் :
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் : பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து

ஆண் :
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

பெண் :
இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

பெண் :
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து
வந்த பின்பு வேர்த்து

ஆண் :
தலையைக் குனியும் தாமரையே

*********************************

Tuesday, May 26, 2020

தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் பாடல் வரிகள்



படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

*********************************

பெண் :
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
மேகம் பாடும்
மேகம்
பாடும்

ஆண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

பெண் :
மேகம் பாடும் பாடல் கேட்டேன்
நானும் பாடி பார்க்கிறேன்

ஆண் :
மோகமோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓ
மோகமே சோகமோ
இனியும் நெஞ்சம் தூங்குமோ

பெண் :
நாளும் நாளும் தேடுவேன்

தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

பெண் :
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே
வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே

ஆண் :
வண்ணங்கள்
நான் எண்ணும் எண்ணங்கள்
எங்கிருந்தோ இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்
இறைவன் சபையில் கலைஞன் நான்

பெண் :  தேவன் தந்த வீணை

ஆண் : அதில் தேவி செய்த கானம்

பெண் :
தேடும் கைகள் தேடினால்
அதில் ராகம் இன்றி போகுமோ

இருவரும்:
தேவன் தந்த வீணை
அதில் தேவி செய்த கானம்

*********************************

Monday, May 25, 2020

ஒரு பூவன குயில் மாமரத்துல - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

***************************

பெண்:
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்
ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம்
கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்

ஏதேதோ மெல்ல மெல்ல
காதோட சொல்ல சொல்ல
ஜோரா சிரிச்சிக்கிரிச்சாம்

என்னென்ன சீதனம் கேட்குதே
என்றது பெண் கிளியே
ஆசை வந்துருச்சே நெஞ்சுக்குள்ள
அன்பு வந்துருச்சே
இன்னும் என்ன தங்க நகைகளும்
வைர நகைகளும் தேவையில்லையடி

குழு:
அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது

குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது

குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது

பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

***************************************

பெண்:
பால் போல அருவியில் யாரோட சேலை
நூலின்றி யார் வந்து நெய்தார் இங்கே
மேங்கங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே
யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே

கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும்
வந்தே கைக்கட்டி நிக்கோணும்
சந்தனம் பூசிய சூரியன் வந்தது பாருங்களேன்
வானம் எட்டுதடி கையிரண்டும் மேளம் கொட்டுதடி

இன்னும் என்ன ஆசைப்பட்டது
யாரும் கிட்டுது கூவு ஏன் குயிலே

குழு:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண்:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது

குழு:
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

பெண்:
அது ஏன் இனிக்கிது மனம் மயங்குது
என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது

குழு:
தேன் குளத்துல தான் குதிச்சது
ஆனந்தத்துல தான் குளிச்சது

பெண்:
அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

குழு:
ஆஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண் & குழு:
ஒரு பூவன குயில் மாமரத்துல கூடு கட்டினது
அது கூவுறதுல குரல் இனிக்கிது மனம் மயங்கினது

***************************************

Sunday, May 24, 2020

மரகத வீணை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

பெண் :
வீசும் காற்றே நீ மெல்ல வீசு
மலரின் வேகம் தாங்காது

ஆண் :
பேசும் கண்ணே நீ மெல்ல பேசு
ஊரார் கேட்டால் ஆகாது

பெண் :
இதயம் எங்கும் பன்னீரின் ஓடை
இங்கும் அங்கும் பாய்கின்றது

ஆண் :
பருவ வயலில் ஒரு அமுத பாசனம்
இரவு விடிய ஒரு வருஷமாகணும்
இருவர் கூடலாம் ஒருவராகலாம்
மதன வேதம் தினமும் ஓதலாம்

பெண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

ஆண் :
கூந்தல் வந்து பாய் போடும் நேரம்
கோடைத் தென்றல் பூத்தூவும்

பெண் :
ஊஞ்சல் நெஞ்சில் நீ போடும் நேரம்
உள்ளம் எங்கே கண் மூடும்

ஆண் :
கனலும் கள்ளும் ஒன்றானபோது
கண்ணே பெண்மை உண்டானது

பெண் :
எனது விழியில் ஒரு கனவு பூத்தது
எனது இதயம் உன்னை எழுதிப் பார்த்தது
புதிய வானமும் புதிய பூமியும்
இணையும் காலம் எதிரில் வந்தது

ஆண் :
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

பெண் :
இதயம் எங்கும் தேன்மழைச் சாரல்
எனக்குள் வீசாதோ
ஓஓஓஓ ஓஓஓ

இருவரும்:
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதமானதோ

*********************************

கண்ணா வா கவிதை - மரகத வீணை பாடல் வரிகள்



படம்: மரகத வீணை
இசை: இளையராஜா

*********************************


கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

************************************

சுதி சேரும் முன்பே
இசை பாட வந்தேன்
விதி சேரும் முன்பே
விளையாட வந்தேன்

புறாவை போல வாழ்ந்தவள்
நிலாவை போல தேய்கிறேன்
வராத மேடை வந்தவள்
அனாதை போல பாடினேன்

இளைய மேகம் திரும்புமா
எனது மண்ணில் பொழியுமா
உறவுப்பூக்கள் அரும்புமா

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
அன்பே வா அழுது நின்றேன் வா
துணைவா

**************************************

உரு தந்தவனை இவள் பாடுகின்றாள்
வரம் தந்தவனை இவள் தேடுகின்றாள்

வராத கூட்டம் வந்தது
சங்கீதம் செய்த வேளையோ
இந்நேரம் உன்னை தேடினேன்
என்னோடு என்ன லீலையோ

எந்தன் கண்ணில் நீர் வரும்
என்று உந்தன் பேர் வரும்
இணைய வேண்டும் இருவரும்

கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா
என்ன சோதனை ஜீவ வேதனை
கான வேளை காணவில்லை நாதனை
கண்ணா வா கவிதை சொல்வேன் வா
தலைவா

***********************************

Saturday, May 23, 2020

பூவென்றும் பொன்னே என்றும் - துருவ நட்சத்திரம் பாடல் வரிகள்



படம்: துருவ நட்சத்திரம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம் தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம் தான்

பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

பெண்:
தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண்:
நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண்:
தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண்:
பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

ஆண்:
சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் வடித்தேன்

பெண்:
கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண்:
கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண்:
பூ மேனி நூலானேன்
பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண்:
பூந்தேகம் நீ ஏந்தும்
பொன்னோடம் தான்

ஆண்:
உன் மோகம் என் நெஞ்சின்
பூபாளம் தான்

பெண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண்:
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

*********************************

Friday, May 22, 2020

வராத காலங்கள் - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு தெய்வம்‌ வந்தது
என்‌ சோகம்‌ கண்டது
காவலாய்‌ நின்றது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

காலங்கள்‌ மாறும்‌ கவலைகள்‌ தீரும் ‌
காத்திருந்தால்‌
தாயிடம்‌ பிள்ளை சேர்ந்தது முல்லை
யார் மறுப்பார்

நடுவில்‌ வந்தவர்‌ கெடுதல்‌ செய்தவர்‌
உறவை அங்கும்‌ இங்குமாகதான்‌ மாற்றினார்‌
இது காலம்‌ செய்த கோலம்‌ அன்றி வேறேது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************

பேதையைப் போல வாழ்ந்து விட்டேனே
சூழ்ச்சியினால்
பிள்ளையை இன்று பார்த்து விட்டேன் உன்
ஆதரவால்
நன்றி சொல்லுவேன் என்றும் என்றுமே
மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய்
இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா
ஒரு அன்னை நெஞ்சிலே புது இன்பம் சேர்ந்தது
தாய்மையைக் கண்டது

வராத காலங்கள்‌ வந்த பொன்‌ நாளம்மா
பெறாத இன்பங்கள்‌ கொண்ட நன்னாளம்மா

*********************************




எங்கேயோ ஏதோ - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

குளிர் மேகங்கள் பனிக் காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏஏஏஏஏஏ
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

ஆண்:
பூஞ்சோலையில் பூந்தென்றலில்
பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது

பெண்:
தோளோடு நான் சாய்ந்தாடவா
சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா

ஆண்:
பொன்மாலை நேரம் தேனானது
பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
ஆ ஆஆ ஆ

பெண்:
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

*********************************

பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலாலா லாலாலாலா
லாலாலாலா லாலாலாலா லா லா
லாலாலாலா லாலாலாலா லா லா

தாயாகினேன் தாலாட்டினேன்
கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே

ஆண்:
மணிப்பிள்ளைகள் மான்குட்டிகள்
உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே

பெண்:
வாடாத முல்லை பூ மேனியே
தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்

ஆண்:
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
ஏ ஏ ஏ ஏ

பெண்:
எங்கேயோ ஏதோ
பாட்டொன்று கேட்டேன்

*********************************

Thursday, May 21, 2020

பூந்தோட்டம் பூவில் - நதியை தேடி வந்த கடல் பாடல் வரிகள்



படம்: நதியை தேடி வந்த கடல்
இசை: இளையராஜா

*********************************

லாலாலா லாலா லாலா லாலாலா
லாலாலா லாலா லாலா லாலாலா
லாலா லாலா லாலா லாலாலா
லாலா லாலா லாலா லா லா லா

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை
கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை
வண்ணங்கள்

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

கவிதைகள் எழுதுக புதிய மேகங்கள்
இனிய நாதங்கள்
பசுமையில் மலருக அழகு மஞ்சங்கள்

காலங்கள் தெய்வத்தின் வேதங்கள்
உள்ளங்கள் ஆனந்த மேளங்கள்
எங்கே என்றோ ராஜாங்கமோ
இளமை நெஞ்சம் தெய்வீகமோ

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

கிளைகளில் குயில்களின் புதிய சந்திப்பு
அதிலும் தித்திப்பு
நதிகளில் அலைகளின் புதிய தாளங்கள்

எங்கெங்கும் கல்யாணக் கோலங்கள்
ஏமாற்றம் இல்லாத ஜீவன்கள்
தன்னைத் தானே ஆள்கின்றன
மண்ணில் இன்று வாழ்கின்றன

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

மனிதர்கள் மனதிலே உதய காலங்கள்
நிழலைப் பாருங்கள்
மரங்களின் நிழலிலே கனவு ஜாலங்கள்
நாளொன்றும் பொழுதொன்றும் போகுது
நாளுக்கு நம் எண்ணம் மாறுது
எங்கே சொந்தம் உண்டாகுமோ
அங்கே நெஞ்சம் சென்றால் என்ன

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள்
ஆடல் மங்கை தோகை வண்ணங்கள்

பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள்
பூந்தோட்டம்

*********************************

Tuesday, May 19, 2020

முதல் முத்த மோகம் - புதிர் பாடல் வரிகள்



படம்: புதிர்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

ஆண்:
தேவை இந்த பாவை என்று
ஆசைத்  தேடுதே
பூவை சூடும் பூவை மீது
மாலைப்  போடுதே

பெண்:
மோதல் காதல் ஆனதே
ராகம் தாளம் சேருதே

ஆண்:
பூந்தேரோடும் பாதையில்
மான் நீராடுதோ

பெண்:
நான் காணாத மோகமே
என் போராடுதோ

ஆண்:
தேகம் எங்கும் தாகம்
இன்ப தேனில் ஊரும் வேகம்
சுகமே

பெண்:
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்

*********************************

பெண்:
கண்ணில் நாணும் மின்னல் உந்தன்
கையில் காணுதே
கைகள் தீண்டும் பொது தேகம்
பெண்மை காணுதே

ஆண்:
காதல் ராஜ கோபுரம்
காண வேண்டும் சீக்கிரம்

பெண்:
நீ தூங்காத ராவிலே
நான் தாலாட்டுவேன்

ஆண்:
நீ தாலாட்டும் பாடலை
நான் பாராட்டுவேன்

பெண்:
கீதம் பாடும் வானம்பாடி
நானும் நீயும் ஆவோம்
புதுமை

முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்
புதிர் போடும் வாலிபம்
புது சுவை சுகம்
நான் கண்டேன்
முதல் முத்த மோகம்
இது என்ன மாயம்
காணாத பேரின்பம் மின்சாரம் பாயும்

*********************************

Monday, May 18, 2020

ஆவாரம் காட்டுக்குள் - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்



படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************


ஆண்:
புள்ளி மயில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில
உற்சவத்தை நடத்த

புள்ளி மயில் முகத்தில் முகத்தில்
வெள்ளி ரதம் இழுத்து இழுத்து
உள்ளம் என்னும் இடத்தில இடத்தில
உற்சவத்தை நடத்த

ஆளோட அரசாட்சி ஆலிங்கனம்
ஆனந்தம் இல்லாட்டி நானெங்கேனோ
அம்மா நீ மறவாதே சாயந்தரம்
ஆலிங்கனம் நூறாகனும்

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************


பெண்:
வேதம் சொல்லி கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து
அம்மனையும் அழைச்சா
என்ன உந்தன் கருத்து
வேதம் சொல்லி கொடுத்து கொடுத்து
வேண்டும் மட்டும் படித்து படித்து
அம்மனையும் அழைச்சா அழைச்சா
என்ன உந்தன் கருத்து


என்னத்த சொன்னாலும் எனக்கில்லையா
என் போல உள்ளாச உனக்கில்லையா

உன்னோடு ஒண்ணானா கணக்கில்லையா
கணக்கில்லையா கூட்டுங்கய்யா

ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

ஆண்:
மணி ஆத்தோட நானும்
ஒரு சேதி கேட்டேன்
காதோரமா

பெண்:
இளம் காத்தோடு ராகம்
கல்யாண மேளம்
ஆதாரமா

இருவரும்:
ஆவாரம் காட்டுக்குள் தேவாரமா
சிறு பூவாரமா

*********************************

வழிமேல் விழியாய் - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்



படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய
வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

ஒரு நாதன் கை கூடும்
திருநாளும் கைக்கூடும்
குழல் நீளும் மலர் சூடும்
வளைக் கோலம் நலம் பாடும்

அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்
அலங்காரம் அரங்கேறும்
புது நாணம் உருவாகும்

மணமாலை கொள்ளும்
வேளை வந்தால் வைபோகமே

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

உனை நாளும் அர்ச்சிக்க
எனை நீயும் வர்ணிக்க
ஒரு பந்தம் ஒரு சொந்தம்
அது பாடும் புது சந்தம்

சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
சுக நாதம் சுப கீதம்
இரு நெஞ்சம் இசை போடும்
பல ராகம் தாளம்
பாவம் யாவும் உண்டாகிட

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

சுகம் ஏகாந்தமாய் மலர
அது ஆகாயமாய் விரிய

வழிமேல் விழியாய்
எதிர்ப்பார்த்திருந்தேன்
வருவாய் மாமுகிலே
நீ வருவாய் மாமுகிலே

*********************************

Sunday, May 17, 2020

காவிரியே - அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள்


படம்: அர்ச்சனை பூக்கள்
இசை: இளையராஜா

*********************************


ஆண் :
லால்லல் லா லால்லல் லா

காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே

பெண் :
காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது
காவிரியே

ஆண் :
காவிரியே
காதலி போல் விளையாடுறியே

*********************************

பெண் :
பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்
என்னமோ

ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்

ஆண் :
அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

பெண் :
ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்தொரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே

*********************************

ஆண் :
காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி வீசுதே
மல்லியப்பூ வாசம்
கையிலே

பெண் : ஹா
ஆண் : கையிலே
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்

பெண் :
புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

ஆண் :
காவிரியே காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் :
லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

*********************************

பூவே இது பூஜை - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்


படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே
இது பூஜை காலமே

*********************************

சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
குயிலே ஏஏஏஏஏஏஏஏஏ
சலங்கை தாளமே
எந்தன்‌ காதில்‌ கேட்குமோ
வாழை மாவிலை
மஞ்சள்‌ வாசம்‌ தோன்றுமோ
பனி வாடைக்‌ காற்று வீசும்போது
பாவி மேனி வாடுதே

பூவே
இது பூஜை காலமே

*********************************

கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
நெஞ்சே ஏஏஏ ஏஏஏஏஏஏ
கண்ணை மூடியும்‌
மனம்‌ தூங்கவில்லையே
கண்ணன்‌ ஞாபகம்‌ உன்னில்‌ நீங்கவில்லையே
திருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்‌
தரவேண்டி ஏங்குதே

பூவே
இது பூஜை காலமே
இளம் பூவை ராகமே
மனம் தாவி வந்த வேகம் தீர்க்க
நாளும் வேண்டுமே

நாளும்‌ உனை நினைத்து நினைத்து
தவித்து தவித்து ஏங்கும்‌ உள்ளம்‌ பாடாதோ
வாழையென வளர்ந்து வளர்ந்து
தினமும் துடிப்பதோ

பூவே

*********************************

Saturday, May 16, 2020

ஊத காத்து வீசயிலே - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது

பெண்:
யே ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

பெண்:

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

கொத்தமல்லி பூவாசம் அத்தமகன் உன் நேசம்
சுத்துது என்ன வேகமா  மோகமா

ஆண்:
நான் என்னத்த செய்ய ஆஆஆஆஆ

இருவரும் : நான் என்னத்த செய்ய

பெண்:
நீ வந்து கைய
தொட்டதும் ஏறுது
ஆசை கட்டளை போட்டு
கட்டுறபாட்டு என்னயும் மீறுது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே

*********************************

பெண்:
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது
பக்கத்திலே நீ வேணும்
கட்டி கொள்ளத்தான் வேணும்
சொக்கி சொக்கி எண்ணம் ஓடுது தேடுது

ஆண்:
அத சொல்லடி புள்ள
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ

பெண்:
அத சொல்லுறபுள்ள வெக்கத்தமெல்ல
விட்டுட்டுபேசுது
நீயும் அள்ளுறபோதும் கிள்ளுறபோதும்
அசந்து பாக்குது
ஊத காத்து வீசயிலே குயிலு கூவயிலே


*********************************


பெண்:
வாசமுள்ள பூமுல்ல
வாடைபட்டுத்தான் மெல்ல
வாடுறேன் ரொம்ப நேரமா ஓரமா

ஆண்:
அத எங்கிட்டசொல்லு

பெண்:
யேயே யேயே யேயே  ஆஆஆ ஆஆ ஆஆ
அத உங்கிட்ட சொன்னா அசந்த பொண்ணா
என்னையும் மெரட்டுது நீ பாக்குற போதும்
கேக்குறபோதும் பார்வையும் மெரட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே
கொஞ்சிடும் ஆசையிலே  குருவிங்க பேசயிலே
வாடதான் என்னை ஆட்டுது  வாட்டுது
ஊத காத்து வீசயிலே  குயிலு கூவயிலே

*********************************

ஆத்து மேட்டுல - கிராமத்து அத்தியாயம் பாடல் வரிகள்



படம்: கிராமத்து அத்தியாயம்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ம் ஹ்ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம்
லால லால லா
லா லால லால லா
லால லால லா லால லா
லா லால லால லா
லா லால லால லா

ஆண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது


பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
காட்டுல
கட்டில் ஒண்ணு போடவா
கையில
கட்டி கொண்டு ஆடவா

பெண்:
ஏஹே என்ன ஆசை
ஏக்கம் வந்து பேச

ஆண்:
கண்ணுக்குள்ள மோகம் தோணுது
கன்னி பொண்ண காணும்போது
ஆத்து மேட்டுல

பெண்: ஒரு பாட்டு கேக்குது

ஆண்:
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு

பெண்:
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

ஆண்:
கேக்கவா
ஒண்ணே ஒண்ணு கேக்கவா
சேக்கவா
கையில் உன்ன சேக்கவா

பெண்:
ஊஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் பேச மாட்டேன்

ஆண்:
சொல்ல சொல்ல வேகம் ஏறுது
தூக்கிகிட்டு போக போறேன்
ஆத்து மேட்டுல

பெண்: ஆ

ஆண்: ஒரு பாட்டு கேக்குது

பெண்:
ஆஹா
ஆடும் காத்துல கீத்துல
தாளம் போட்டு
ஆத்து மேட்டுல
ஒரு பாட்டு கேக்குது

*********************************

Wednesday, May 13, 2020

செவ்வரளி தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தானானே ஏஏ ஏஏஏஏஏ
தானானா ஆஆஆஆ ஆஆஆஆ
தானானா ஆஆஆஆ

பெண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல

செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

*********************************

ஆண்:
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே

பெண்:
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே

ஆண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************


ஆண்:
ஆ ஆஆஆ ஆஆஆ

ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா
ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா

ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா
ஆசை அது தேயாதம்மா

*********************************

பெண்:
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா

ஆண்:
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே

பெண்:
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு (ஆண்: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண்:
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************

வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்


படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

தானதன்னே தானதன்னே தானா
தானதன்னே தானதன்னே தானா

வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக
வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக

காளியம்மன்‌ பேரச்‌ சொல்லி கூவுதடி‌ கோழி
நெனச்சதெல்லாம்‌ நடத்தி வைப்பா நம்மங்கலம்  காளி
வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக

*********************************

பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு
சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா
நல்லபடி நாடு உய்ய மாதம்‌ மூணு மாரி பெய்ய
நல்லபடி நாடு உய்ய மாதம்‌ மூணு மாரி பெய்ய
அம்மா வரம்‌ தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

வெதச்சதெல்லாம்‌ வெளன்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக

தன்னானே தான தன்னானே தான
தன்னானே தான தானானேனா

*********************************

எல்லாரும்‌ வாழவும்‌ இன்பங்களை காணவும்‌
கண்பாரும்‌ தேவியே நீலியே சூலியே
எல்லாரும்‌ வாழவும்‌ இன்பங்களை காணவும்‌
கண்பாரும்‌ தேவியே நீலியே சூலியே

ஊர்‌ உலகம்‌ சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
ஊர்‌ உலகம்‌ சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க
அம்மா வரம்‌ தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக

காளியம்மன்‌ பேரச்‌ சொல்லி கூவுதடி‌ கோழி
நெனச்சதெல்லாம்‌ நடத்தி வைப்பா நம்மங்கலம்  காளி
வெதச்சதெல்லாம்‌ வெளைஞ்சு வரும்‌ பொன்னாக
வேண்டியத கொடுக்க வேணும்‌ கண்ணாக

*********************************

Monday, May 11, 2020

ஆசை நெஞ்சில்- பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************


நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌

கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ
ஆஅஆ

நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌
கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ

நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில்‌ நின்று
பொன்னா என்றா என்னை
சுட்டுப்‌ பார்த்தாய்‌
ஆஅஆ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே
ஆஆஆஆ

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே

நீ பார்த்த பார்வை நெஞ்சில்‌
பால்‌ வார்க்கும்போதும்‌ மிஞ்சும்‌
வாழ்நாள்‌ என்றும்‌
நீதான்‌ என்றே வாழ்வேன்‌ நான்‌

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

Sunday, May 10, 2020

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌ - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்


படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது

*********************************

பூவை எந்தன்‌ உள்ளம்‌
தேவன்‌ வாழும்‌ இல்லம்‌
பூவை எந்தன்‌ உள்ளம்‌
காற்றிலே மேகம்‌ போல்‌
எந்தன் ஆசை தேய்ந்ததே

வாராயோ கேளாயோ
எழில்‌ முழுமதி தேய்கிறதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது

*********************************

வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை

மின்னலை தேடியே
தாழம்பூவும்‌ ஏங்குதே

பாராயோ கேளாயோ
இரு மனம்‌ அலை மோதிடுதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

*********************************

Saturday, May 9, 2020

காலை நேர காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

*********************************

ஆண்:
நடந்தால் காவேரி நீ
ஈஈஈஈ
நகைத்தால் ஸ்ரீதேவி தான்

பெண்:
மொழியே தேவாரமோ
ஓஓஓஓ
விழி மேல் பாமாலையோ

ஆண்:
கனவாய் நீயானால்
இமையால் நான் பூட்டுவேன்

பெண்:
மனமே நீயாள
மணித்தேர் நானோட்டுவேன்

ஆண்:
கன்னி தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்

பெண்:
பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ


ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்:  மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

பெண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
பெண்: பார்த்துச் சொல்லு

*********************************

பெண்:
மடித்தேர் ராஜாங்கமே
ஏஏஏஏஏஏ
கிடைத்தால் மாமாங்கமே

ஆண்:
மலைத்தேன் மேலோங்கவே
ஏஏஏஏஏஏ
இளைத்தேன் நான் ஏங்கியே

பெண்:
கனி வாய் தேனாற்றில்
ஒரு நாள் நீராட்டுவாய்

ஆண்:
இதழாம் தீரத்தில்
மறுநாள் பாராட்டுவேன்

பெண்:
அந்தி வானில் குங்கும சேலை
தங்க மேக சங்கம மாலை

ஆண்:
நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
ஆண்: பார்த்துச் சொல்லு

*********************************

Friday, May 8, 2020

இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

*********************************

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

*********************************

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது
யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

*********************************

ஏய் ஆத்தா - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள் yeh aatha payanangal mudivadhillai lyrics tamil



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா

*********************************

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்

தவிச்ச மனசுக்குத்
தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு
அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

*********************************

நான் போறேன் முன்னால
நீ வாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே
வாடுற வாட்டத்துக்கு

சிரிச்ச சிரிப்பில
சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு
எம்மனசு பதறுது
பவள வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா
ஆ ஆஆ ஆஆ
நான் பார்த்தா பார்க்காமலே போரியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம் வா புள்ள

ஏய் ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா
நான் பார்த்தா பார்க்காமலே போரியா

*********************************

ராக தீபம் ஏற்றும் நேரம் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ

ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

என் விழியோ கடல் ஆனதம்மா
என்னங்களோ அலை மோதுதம்மா
புது ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

*********************************

வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
வாடிடும் என் நெஞ்சம் குளிர்ந்திடுமோ
வசந்தமும் என் வாழ்வில் மலர்ந்திடுமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
விழிகள் பாராமல் செவிகள் கேளாமல்
கவிதை அரங்கேருமோ
தேவி உன் கோவில் வாசல் முன்னாலே
காவியம் தேனென பூமியில்

முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ
முதல் முதல்
ராக தீபம் ஏற்றும் நேரம்
புயல் மழையோ

*********************************

ஆனந்த கங்கை வெள்ளம்
பொங்கப் பொங்க
ஆரம்ப நாளில் இன்பம் கொஞ்சக் கொஞ்ச
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல
பாடும் உள்ளம் துள்ளத் துள்ள
பாடல் ஒன்று சொல்லச் சொல்ல

ஆயிரம் சந்தம் நாவினில் சிந்தும்
அம்பிகைக்கே சொந்தம்
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
நித்தம் நித்தம் உள்ளம் களிக்க
கற்ற வித்தை என்றும் செழிக்க
முத்து ரத்தினம் சிந்தும் நித்தினம்
அன்னை உன்னை வணங்கி நின்று

ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
புது வித ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது
கான மழை இனி நான் பொழிவேன்
தேன் மழையில் இனி நீ நனைவாய்
புது ராக தீபம் ஏற்றும்
நல்ல நேரமிது புது வித
ராக தீபம் ஏற்றும் நல்ல நேரமிது

*********************************

Thursday, May 7, 2020

வைகரையில் வைகைக்கரையில் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர் போல் கருகி
பல பல ஜென்மம் நான் எடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்


*********************************

ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேள் என நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகரையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

*********************************

தோகை இளமயில் - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

ஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆ
ஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆ
ஆஆ ஆஆ ஆஆ

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ

*********************************

கோலம் போடும் நாணங்கள்
காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள்
ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா
நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில்
சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம்
நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

*********************************

பூமி எங்கும் பூந்தோட்டம்
நாம் காண வேண்டும்
புதுத் தென்றலோ
பூக்களில் வசிக்கும்,
ஆகாய மேகங்கள்
நீரூற்ற வேண்டும்
அந்த மழையில்
மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும்
கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

*********************************

மணி ஓசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள்



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************

பெண்:
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ ம்ம்ம்
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

ஆண்:
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக்கண்ணன் ஆ.(இருமல் )
பேசக்கூடாதோ (இருமல் )

பெண்:
கண்ணன் பாடும் பாடல்
கேட்க ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக்கூடாதோ

ஆண்:
ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ நெஞ்சம் தாங்குமோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

ஆண்:
பாதை மாறி போகும்போது..உ.. (இருமல்)
ஊரும் வந்தே சேராது(இருமல் )
தாளம் மாபோடும்போது ஆ..(இருமல்)
ராகம் தோன்றா..( இருமல் )

பெண்: பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது

ஆண்: தாளம் மாறி போடும்போது ராகம் தோன்றாது

பெண்: பாடும் புது வீணை இங்கே

ஆண்:
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ

பெண்: ம் .ம்...மணி ஓசை கேட்டு எழுந்து

ஆண்: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பெண்: திருத்தேரில் நானும் அமர்ந்து

ஆண்: ஒரு கோயில் சேர்ந்த பொழுது

பெண்:
அந்த கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ

ஆண்:
ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து (மூச்சு)
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

*********************************

Sunday, May 3, 2020

ஏழை விளக்கு - எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

ஆ ஆ ஆ ஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி
கொஞ்சம்‌ மோகம்‌ இந்துதடி
எச்சில்‌ இரவு தூங்குதடி
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி
ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி

*********************************

தூரத்தில இருந்தாலும்‌
ஜோதி நிலா தெரிகிறதே
பூமியிலே இருந்தாலும்‌
ராணி முகம்‌ தெரியலையே
சொல்லி வச்சு வந்த நிலா
கொள்ளி வச்சு போகாதோ
கண்ணீர்‌ தெரிச்சு அந்த கறை அழியாதோ
கண்ணீர்‌ தெரிச்சு அந்த கறை அழியாதோ

அவள்‌ சிறகிழந்தாளோ இல்ல சிறையிருந்தாளோ
நடுச்சாமம் அகராம தேங்கி  நிக்குதடி
அழுதாலும்‌ முடியாதோ தொழுதாலும்‌ விடியாதோ
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி  விட்டதடி

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி

*********************************

பாவி மக கண்ணீரில்‌
பாயும்‌ மிதந்திருக்கும்‌
மிச்சமுள்ள கண்ணீரில்‌
மச்சமெல்லாம்‌ கரைஞ்சிருக்கும்
கை முளைச்ச ரோசாவே
கண்‌ முழிச்சு வாடாதே
நாடு சுடுகாடு இதில்‌ காதல்‌ எங்கிருக்கு
அட நாடு சுடுகாடு இதில்‌ காதல்‌ எங்கிருக்கு

இது விதையில்ல சாமி இது சதியுள்ள பூமி
நடபாத நிலவாகி  தீபம்‌ தந்தவளே
மனசெலல்லாம்‌ இருளாச்சோ
மயில்‌ தோகை சருகாச்சோ
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி

ஏழை விளக்கு அது வானில்‌ வந்ததடி
கண்ணில்‌ சோகம்‌ தங்குதடி
கொஞ்சம்‌ மோகம்‌ இந்துதடி
எச்சில்‌ இரவு தூங்குதடி
பாலா பொழிஞ்ச நிலா சோகம்‌ சொட்டுதடி
இங்கு வாங்கி கொடுத்த மல்லி வாடி விட்டதடி

*********************************

கடற்கரையில்‌ இருப்போர்க்கு- எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

ஆண் :
கடற்கரையில்‌ இருப்போர்க்கு அலையோச
காசில்லா எங்களுக்கு எலை ஓச

தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌

நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு
தடையேது அட சாமி விளையாடு
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து

குழு:
ஹோய் நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து
ஹேய்  நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு

*********************************

ஆண் :
குடும்பத்தில்‌ கல்யாண தேதி வெச்சா
அழைப்பு கொடுக்கட்டும்‌ இல்லாமல்‌ போகட்டும்‌
அங்கேயும்‌ நாங்க இருப்போம்‌

குழு:
குடும்பத்தில்‌ கல்யாண தேதி வெச்சா
அழைப்பு கொடுக்கட்டும்‌ இல்லாமல்‌ போகட்டும்‌
அங்கேயும்‌ நாங்க இருப்போம்‌

ஆண் :
சாமி எங்களை பாக்காம விட்டாலும்‌
கோயிலை நாங்கதான்‌ பாக்காம விட்டமா

குழு:
எல்லாரும்‌ அம்மாதான்‌ எங்கேயும்‌ எங்களுக்கு

ஆண் :
ஓட்டுரிமை இல்லாட்ம என்னடாப்பா
ரோட்டுரிமை கொடுத்தானே போதுமப்பா

குழு:
ஹோய் நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்
இருந்தா குடிப்போம் இல்லேன்னா படுப்போம்‌
தினமும்‌ விருந்து தெருவில்‌ இருந்து
ஹேய்  நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு

*********************************

ஆண் :
ஒழைக்கத்தான் எல்லோரும்‌ ஆசை வெச்சோம்‌
பொழப்பும் கிடைக்கல  பூவாவும்‌ வழியில்லே
மானத்தை தெருவில்‌ வச்சோம்‌

குழு:
ஒழைக்கத்தான் எல்லோரும்‌ ஆசை வெச்சோம்‌
பொழப்பும் கிடைக்கல  பூவாவும்‌ வழியில்லே
மானத்தை தெருவில்‌ வச்சோம்‌

ஆண் :
நாட்டிலே என்னதான்‌ ஆட்சிகள்‌ மாறட்டும்‌

குழு:
ரோட்டிலே எங்களோட காட்சிகள்‌ மாறாது
எப்போதும்‌ நாங்களே தப்பான தாளங்களே

ஆண் :
தமிழ்‌ எழுத்து புரிஞ்சதில்லை புரிஞ்சதில்லை
ஆனாலும்‌ தலையெழுத்தப்‌ புரிஞ்‌சருக்கோம்‌ ஹேய்‌

குழு:
நடு ரோடு அடி ஆத்தி நம்ம வீடு ஹேய்‌ ஹேய்‌
தடை ஏது அட சாமி விளையாடு ஹேய்‌ ஹேய்

ஆண் :
தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌
தினத்தோம்‌ தினத்தோம்‌ தினத்தோம்‌ தித்தோம் தித்தோம் ‌

*********************************

Saturday, May 2, 2020

பூத்து நிக்குது காடு- எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

பெண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

பெண் :
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு

ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

*********************************

ஆண் :
இரண்டும் வயசு
எளசு சிறிசு

பெண் :
எல்லாம் புதுசு
ஆசை பெரிசு

ஆண் :
ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு
உஉஉஉஉஉஉஉஉ

பெண் : ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு

ஆண் :  உண்மைக்கு ஏதம்மா விளக்கு

பெண் :
அதோ அந்த மேகம்
நிலாவோட சரசம்

ஆண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

*********************************

ஆண் :

ஏலாஏலேலோ ஏலாஏலேஏலோ
ஏலாஏலேலோ ஏலேலேலோ
ஏலாஏலா ஏலேலேலோ
ஏலாஏலா ஏலேலேலோ

பெண் :
கடலில் விழுந்தா
அலைதான் தெரியும்

ஆண் :
கனவில் மெதந்தா
சுகம்தான் புரியும்

பெண் :
ஆறு கலக்குது அங்கேதான்
ஆஅஆஅ ஆஅஆ

ஆண் :  ஆறு கலக்குது அங்கேதான்

பெண் : ஆசை கலக்குது இங்கேதான்

ஆண் :
சதாப் பாத்துப் பாத்து
ஒரே ஆசைக் காத்து

பெண் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

ஆண் :
ஒரே பார்வை பார்த்து
ஏதோ கேள்வி கேட்டு

இருவர் :
பூத்து நிக்குது காடு
பாத்து நிக்குது ஆடு

*********************************

பூமேலே வீசும் பூங்காற்றே- எச்சில் இரவுகள் பாடல் வரிகள்



படம் : எச்சில் இரவுகள்
இசை : இளையராஜா

*********************************

ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா

பெண்:
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ

ஆண்:
கண் வாசலில் உன் வாசமோ
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா

*********************************

ஆண்:
தெருவோரம் தினம் பாடல்
பாடும் நெஞ்சில் நீயே
புதிதாக பல தாளம்
போடும் கண்ணில் யாரோ
நானோ தினம் தானம் கேட்க்கும்
காதல் பிச்சைககாரன்

பெண்:
உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
உன் மார்பில் நான் சாய்ந்தாடும்
பொன்னான நாள் வாராதோ
நினைத்தால் கொடுப்பேன்
கண்ணா இன்னும் ஏன் தாகமோ
கண் வாசலில் உன் வாசமோ

ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா

*********************************

பெண்:
நடை பாதை எங்கள் நாடு
நீயே அங்கு ராஜா
இரவாகி வரும்போது
நானே உந்தன் ராணி
நானோதினம் தானம் கேட்க்கும்
காதல் பிச்சைக்காரி

ஆண்:
அச்சாரம் தான் ரோசாப்போ
முத்தாடவா ராசாத்தீ
அச்சாரம்தான் ரோசாப்போ
முத்தாடவா ராசாத்தீ
சிரிப்பாய் விரிப்பாய்
பாயில் என்னை பாராட்டுவாய்
கண் வாசலில் உன் வாசமோ

பெண்:
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீசமாட்டாயா

ஆண்:
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ

பெண்:
கண் வாசலில் உன் வாசமோ

ஆண்:
பூமேலே வீசும் பூங்காற்றே

பெண்:
என் மேல் வீசமாட்டாயா

இருவரும்:
என் மேல் வீசமாட்டாயா
என் மேல் வீசமாட்டாயா

*********************************